ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இலங்கை அழைத்துவரப்பட்ட தென்னிந்திய அறிஞர் அல்தாஃபி அவர்கள் இலங்கையில் ஆற்றிய உரைகளின் CD மற்றும் DVDக்களை பெற்றுக்கொள்ள 0771-299562 என்ற தொலை பேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label ஜமாஅதே இஸ்லாமி. Show all posts
Showing posts with label ஜமாஅதே இஸ்லாமி. Show all posts

பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறா?

Saturday, June 4, 2011


(ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மாத இதழான அழைப்பு பத்திரிக்கையில் பெயர் கூறி விமர்சனம் செய்வது தொடர்பாக ஒரு வாசகர் கேட்ட கேள்விக்குபத்திரிக்கையின் ஆசிரியர் பர்சான் அவா்கள் கொடுத்த பதில்.)
உங்கள் சஞ்சிகையில் இடம் பெறும் அதிகமான ஆக்கங்கள் இன்னொருவரை அல்லது இயக்கத்தை குத்திக்காட்டும் விதமாகவும், காயப்படுத்தும் விதமாகவும் எழுதப்பட்டுள்ளது. பல பிரபலமான தாஈக்களை தரம் குறைத்து மதிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. அவர்களால் செய்யப்படும் சேவைகளை மறைத்து சில கருத்து முரண்பாடுகளுக்காய் அவர்களை மிக மோசமாக வர்ணித்து எழுதப்பட்டுள்ளது. அதிலும் பெயர் குறிப்பிட்டு விமர்சனங்களை எழுதியிருப்பது ஒரு தரக்குறைவான செயலல்லவா? கருத்து முரண்பாடுகள் இருக்கிறது என்பதற்காக யாரையும் காரசாரமாக விமர்சித்து எழுதுவதோ,வழிகேடர்கள் போல் சித்தரிப்பதோ நல்லதோர் விடயமல்லவே?
பின்த் அப்தில் காதர் – மள்வானை
பதில்
தர்கா வழிபாடு என்றும், சந்தனக்கூடு என்றும், கொடி மரம் என்றும், தட்டு – தகடு என்றும் ஷிர்க்கில் மூழ்கிப்போயுள்ளவர்களையும், பாங்குக்கு முன் ஸலவாத்து, மிஃராஜ் – பராஅத் நோன்பு, தஸ்பீஹ் தொழுகை என்று பித்அத்தில் சங்கமித்தவர்களையும், வரதட்சணை, வட்டி, மது என்று பகிரங்கமாக பெரும் பாவங்களில் ஈடுபடுவோரையும், ஜின் வசிய்யத்து, மந்திரம், தந்திரம் என்ற போர்வையில் சமூகத்தை ஏய்த்துப் பிழைப்போரையும், மத்ஹபு மாயையில் சிக்குண்டு சமூகத்தையும், சன்மார்க்கத்தையும் துண்டாடும் போலி உலமாக்களையும், ஆட்சி – அதிகாரம்,சமூக ஒற்றுமை என்ற கோஷங்களுக்குப் பின் மறைந்து கொண்டு குர்ஆன் – ஸ_ன்னாவுக்கு எதிரானக் கருத்துக்களை விதைத்து, குராபிகளுக்கு கூஜா தூக்கும் ஜமாஅத்துக்களையும் நாம் விமர்சிக்கும் போது, இப்படியெல்லாம் பண்பாடற்று விமர்சிப்பது தவறு: இது கேட்போர் மனதை புண்படுத்துவதோடு, தொடர்ந்தும் சத்தியத்தை கேட்காமல் இருப்பதற்கே வழிவகுக்கும் என்று கூறி, மேற்சொன்ன குற்றங்களை நியாயப்படுத்தும் இயக்கங்களையும், அதன் தாஈக்களையும்,அக்கருத்தால் கவரப்பட்டவர்களையும் தஃவாக்களத்தில் பரவலாகக் காண முடிகிறது.
இதன் ஓர் வெளிப்பாடாகவே மேற்குறித்த விமர்சனமும் அமைந்துள்ளது.இங்கு யாரெல்லாம் பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளார்களோ அவர்களே தம் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் பலரின் பெயர்களை பச்சையாய் குறிப்பிட்டு விமர்சிக்கத் தான் செய்கிறார்கள். ஸல்மான் ருஷ்தி, தஸ்லீமா நஸ்ரின், ஜோர்ஜ் புஸ், டோனி பிளேயர், ஹ_ஸ்னி முபாரக், முஅம்மர் கடாபி, அப்துல்லாஹ்… இன்னும் இது போன்ற பலரை விமர்சிக்கக் கூடாது என்பவர்கள் கடுமையாகவும், காரமாகவும் விமர்சிப்பதை அன்றாடம் பார்க்க முடிகிறது.
இன்னும் சொல்லப் போனால், யாரை இவர்கள் இலக்கு வைத்து இவ்விமர்சனத்தை புரிகிறார்களோ அந்தப் Pது யின் பெயரை குறிப்பிட்டே தமது பத்திரிகைகளில் இவர்கள் விமர்சித்தும் வருகிறார்கள். இவர்களின் இவ்விமர்சனம் நியாயபூர்வமானது கிடையாது என்பதற்கு இவர்களே தக்க சான்றாகவும் உள்ளனர்.
விமர்சனம் என்று வருகின்ற போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விடயங்கள் உள்ளன. முதலில் விமர்சனத்தில் எது அனுமதிக்கப் பட்டது? எது தடை செய்யப்பட்டது? என்பதனை ஒவ்வொருவரும் சரியாகப் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
விமர்சனம் இருவகைப்படும்:
1. தனி மனிதன் சமூகத்தை பாதிக்காத விதத்தில் புரியும் தனிப்பட்ட தவறுகள் சம்பந்தப்பட்டவை.
2. தனி மனிதன் சமூகத்தை பாதிக்கும் விதத்தில் புரியும் தவறுகள் சம்பந்தப்பட்டவை.இதில் சமூகத்தை எவ்விதத்திலும் பாதிக்காத, தவறிழைக்கும் மனிதனும் அல்லாஹ்வும் மாத்திரம் சம்பந்தப்பட்ட தவறுகள், பாவங்களைப் பொறுத்த மட்டில் அவற்றை பெயர் குறிப்பிட்டு, எழுத்து மூலமோ, பேச்சு மூலமோ விமர்சிப்பது கூடாது. கூடாது என்பதை விட அவற்றை நாளு பேருக்கு தெரியாதவாறு மறைக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறது.
ஆனால், ஒரு தனிமனிதன் விடக்கூடிய தவறு அதிலும் குறிப்பாக மார்க்கம் சம்பந்தப்பட்ட விடயத்தில் ஒருவர் விடும் தவறு ஒரு சமூகத்தை பாதிக்கும் விதமாய் அமையுமாயின், அத்தவறை தயங்காது தட்டிக் கேட்பதும், சுட்டிக் காட்டுவதும் அது குறித்து மக்களை விழிப்புறச் செய்யும் விதமாய் விமர்சிப்பதும் ஒரு முஸ்லிமின் கடமை.
கடமை என்பதை விட அது தான் மார்க்கம்.சகோதரி ஆதங்கப் படும் அளவுக்கு நாம் எதை விமர்சித்தோம்? எதற்காக விமர்சித்தோம்? உங்கள் பார்வையில் அற்பமாகக் கருதப்படும் கருத்து முரண்பாடுகளுக்காகவா? அல்லது அகீதாவுக்கே ஆப்பு வைக்கும் அபத்தங்களுக்காகவா?ஹதீஸை புரியும் இஜ்திஹாதில் ஏற்பட்ட தவறுக்காகவா? ஹதீஸையே மறுதலிக்கும் மடைமைக்காகவா?
நமது இதழில் யூஸ_புல் கர்ளாவி, அஷ்ஷெய்க் அகார் முஹம்மது(நளீமி), அஷ்ஷெய்க் றவூப் ஸெய்ன்(நளீமி), மவ்லானா மவ்தூதி, மவ்லானா ஜகரிய்யா ஸாஹிப்… இவர்கள் போன்ற பலரை நாம் பெயர் குறிப்பிட்டுத் தான் விமர்சித்துள்ளோம். இன்ஷா அல்லாஹ், இனிமேலும் விமர்சிப்போம். இவர்கள் குறித்த எமது விமர்சனம் எந்த அடிப்படையில் அமைந்திருந்தது?உதாரணத்திற்கு, யூஸ_ப் அல் கர்ளாவி கஞ்சா அடித்தார்;, வட்டி வாங்கினார், தனிமையில் சினிமா பார்த்தார் என்று அவர்களின் தனிப்பட்ட வாழ்வோடு சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விடயங்களை விமர்சித்தோமா? அல்லது ‘அல்கஹோலை குறைந்தளவில் பருகினால் அது குற்றமல்ல’, ‘சிறிய வட்டி ஹலால்’, ‘பெண்கள் சினிமாவில் நடிப்பது கூடும்’, ‘மீலாது விழா கொண்டாடலாம்’ போன்ற அல்குர்ஆனுக்கும் ஸ_ன்னாவுக்கும் முரணாக இவரால் வழங்கப்பட்ட மார்க்கத் தீர்ப்புகளை அல்குர்ஆன் ஸ_ன்னா அடிப்படையில் தவறு என்று விமர்சித்தோமா?
ஒருவர் முன்வைக்கும் கருத்து அல்லது கொள்கை தவறானது என்று உறுதியாகத் தெரிந்தால்,அதை மக்கள் சரிகண்டு அதன் வழியில் சென்று வழிகேட்டில் வீழ்ந்து விடாமல் அவர்களை தடுப்பதாக இருந்தால், அக்கொள்கையின் விபரீதத்தை மக்களுக்கு விளங்கப் படுத்தும் விதமாய் விமர்சிப்பதைத் தவிர வேறு என்ன வழி தான் இருக்க முடியும்?
இதைக்கூட நாமாகக் கற்பனை செய்து கூற வில்லை. திருக்குர்ஆனும் நபி மொழிகளும் மக்களை ஏமாற்ற முனையும் பேர்வழிகளை விமர்சிப்பதன் மூலம் அவர்களின் முகத்திரையை கிழிக்குமாறு எம்மை பணிக்கின்றது. இதற்கான சான்றுகள் இதோ: நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தங்களைச் சேர்ந்த ஓர் ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்து விட்டதாகக் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘கல்லெறிந்து கொல்லுதல் பற்றி தவ்ராதில் கூறப்பட்டுள்ளது என்ன?’ என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் ‘அவர்களுக்கு கசையடி கொடுத்து இழிவு படுத்துவோம்’ என்று விடையளித்தனர். அப்போது, அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் யூதர்களை நோக்கி ‘நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள். தவ்ராதில் கல்லெறிந்து கொல்லுதல் பற்றிக் கூறப்பட்டுள்ளது’ என்றார். உடனே அவர்கள் தவ்ராதை எடுத்து வந்தனர். அவர்களில் ஒருவர் கல்லெறிந்து கொல்வது சம்பந்தமான வசனத்தைக் கையால் மறைத்துக் கொண்டு, அதற்கு முன் பின் வசனங்களை படித்தார். ‘கையை எடுப்பீராக!’ என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கூறியதும் அங்கே அந்த வசனம் காணப்பட்டது என்ற செய்தி புகாரி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
அவர்கள் புண்படுவார்களே என்று எண்ணி அவர்களின் தவறை சுட்டிக்காட்ட நபித்தோழர் தயங்க வில்லை. நபியவர்களும் அதை அங்கீகரித்தார்கள்.‘தங்கள் கைகளால் புத்தகத்தை எழுதிக் கொண்டு, இது அல்லாஹ்விடமிருந்து வந்தது எனக் கூறியோருக்குக் கேடு உண்டாகட்டும்’ (2:79) என்று இறைவன் கூறுகிறான். அவர்கள் வேதத்தில் சுயமாகச் சேர்த்துக் கொண்டவைகளை இங்கே இறைவன் விமர்சனம் செய்கிறான்.இன்ஜீல் என்பது ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டு,அவர்கள் மக்களுக்குப் போதித்த தாகும் (5:110). ஈஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களால் எழுதப்பட்டவற்றை இன்ஜீல் என்று கூறி, மக்களை ஏமாற்றும் போக்கை விமர்சனம் செய்வது தவறா?
ஒட்டகம் உண்பதைத் தங்களுக்கு இறைவன் ஹராமாக்கியதாக யூதர்கள் பொய் கூறிய போது,தவ்ராத்தைக் கொண்டு வந்து, அதை நிரூபியுங்கள் (3:93) என்று நபியவர்களை சவால் விடச் செய்தது பிழையா?வேதத்திற்கு தவறான விளக்கம் கூறி ஏமாற்றி வந்ததையும் இறைவன் கண்டிக்கத்தவற வில்லை (3:78). நபியவர்கள் பற்றிய முன்னறிவிப்பைத் திட்டமிட்டு அவர்கள் மறைத்து வந்ததையும் இறைவன் அடையாளம் காட்டாமல் விடவில்லை (2:146). வேதத்தில் நீங்கள் மறைத்து வைத்த அனேக வசனங்களை அம்பலப்படுத்தவே நமது தூதர் உங்களிடம் வந்துள்ளார் (5:15) என்று கூறி, அவர்களை விமர்சனம் செய்யும் நோக்கத்திற்காகவே நபி (ஸல்) அவர்கள் அனுப்பப் பட்டதாக இறைவன் பிரகடனம் செய்கின்றான். இப்றாஹீம் (அலை) அவர்கள், யூத மார்க்கத்தவராக இருந்தார்கள் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த போது, இப்றாஹீம் காலத்தில் தவ்றாத் அருளப்பட வில்லையே! அவருக்குப் பின்னர் தானே தவ்ராத் அருளப்பட்டது (3:67) என்று மறுப்புக் கூறி, அவர்களை இறைவன் வாயடைக்கச் செய்தான்.
மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஒருவர் தவறு விடும் போது அல்லது சத்தியத்தை மறைக்கும் போது அதனை வன்மையாக விமர்சிக்க வேண்டும் என்பதற்கான சான்றுகளாகும்.பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறா? ஒரு தவறை சுட்டிக் காட்டும் போது,தவறிழைத்தவனுக்கு தான் செய்வது தவறு தான் என்று விளங்கும் விதத்திலும், இது எனக்குத் தான் சொல்லப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளும் வகையிலும், உள்ளத்தை உசுப்பும் விதத்திலும் மழுப்பலோ, மறைத்தலோ, சுற்றி வளைப்போ இன்றி சொல்வதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். இது எப்போது சாத்தியம்? பெயர் குறிப்பிட்டு விமர்சிக்கும் போதே. இதையும் கூட நாமாகக் கூற வில்லை. யூத கிறிஸ்தவர்கள் (2:120), இஸ்ரவேலர்கள் (2:79), மஜூஸிகள் (22:17),முனாபிக்குகள் (2:8, 4:108), ஏன் ரஸ_லுல்லாஹ் (80:1-10, 3:128, 66:1), கூட தவறிழைக்கும் ஒவ்வொரு கணமும் அல்லாஹ்வால் சுட்டிக்காட்டப் பட்டு விமர்சிக்கப்பட்டது இவர்களுக்கு தெரியாதா?தவறுகளை விமர்சிக்கும் போது அதைச் சொன்னவரையும் அதைப்பின்பற்றும் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பெயர் குறிப்பிட்டுத் தான் விமர்சிக்க வேண்டும். இதுவும் அல் குர்ஆனின் வழி முறை தான். ஆது கூட்டம் (7:71), ஸமூது கூட்டம் (27:47), யானைப்படை (105:1), யஃஜூஜ் மஃஜூஜ் (18:94), அபூ லஹப் (111:1-3), இரம் (89:7), காரூன் (28:76), ஆஸர் (6:74), ஃபிர்அவ்ன் (2:49), சாமிரி (20:85),ஜாலூத் (2:249) ஆகியோர் அல்லாஹ்வால் விமர்சிக்கப்பட்டதும் இந்த அடிப்படையில் தான்.
இது போல், இன்னும் அனேக இடங்களில் வேதமுடையவர்களையும் பல தெய்வக் கொள்கையுடையோரையும் விமர்சனம் செய்துள்ளான். ‘வேத முடையோரே!’ என்று பல இடங்களில் அவர்களை அழைத்து, அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் உள்ளான். பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறுதான் என்றால் ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர்களின் குறைகளை அக்குவேர் ஆணிவேராக விமர்சிக்கும் ‘இல்முல் ஜரஹ் வத்தஃதீல்’ எனும் கலையை இவர்கள் பண்பாடற்ற கலை என்று கூறத்துணிவார்களா? ஸகாத் வசூலிப்பதற்காக அனுப்பப்பட்ட நபித்தோழர் ஸகாத் பணத்துடன் இணைத்து வழங்கப்பட்ட அன்பளிப்பை ‘இது எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டது’ என்று கூறியதைக் கேட்ட நபிகளார், முகம் சிவந்தவராய் மிம்பரில் ஏறி, அனைத்து தோழர்களையும் ஒன்று கூட்டி ‘இவர் தனது தாயின் வீட்டில் இருந்திருந்தால் இது இவருக்குக் கிடைத்திருக்குமா?’ என்று கடிந்து கொண்டு அனைவர் முன்னிலையிலும் ஒரு நபித்தோழரை நபிகளார் விமர்சித்ததையும் பண்பாடற்ற விமர்சனம் என்று குறை காணப்போகிறார்களா?காரமாகவும் கடுமையாகவும் விமர்சிப்பது அல் குர்ஆனுக்கு முரணா? நாம் எமது பேச்சுகளிலும், எழுத்துகளிலும் தவறிழைப்பவரை விமர்சிப்பதில் உள்ள கடுமையை விட,காரத்தை விட அல்லாஹ் தவறிழைப்பவர்களை விமர்சிப்பதற்காக பிரயோகிக்கும் வார்த்தைப் பிரயோகம் மிகுந்த கடுமையும் காரமும் மிக்கதாக உள்ளது.
அல் குர்ஆனின் வசனங்களை ஏற்க மறுப்பவனை, அதன் போதனைகளை மறுப்பவனை விமர்சிக்கும் போது “அவனுக்குறிய உதாரணம் நாய். அதை நீ தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது.” (7:176) ‘நாய்’ என்று விமர்சிக்கிறான்.
இஸ்லாத்தை கற்பதற்கு முன்வராத அறிவிலிகளை விமர்சிக்கும் போது “அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால் நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள்.” (7:179)
‘கால் நடைகள்’ என்கிறான்.வேதத்தைக் கற்று அதன் படி ஒழுகாதவர்களை விமர்சிக்கும் போது“தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது.” (62:5) ‘கழுதை’ என்று பொறிந்து தள்ளுகிறான்
.அல் குர்ஆன், அஸ் ஸ_ன்னா ஒன்றை சொல்லும் போது அதனை புறக்கணித்து, அதற்கு மாற்றமாக நடப்பவர்களை விமர்சிக்கும் போது “அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.” (74:50-51) ‘கழுதை’ என்று காட்டமாக விமர்சிப்பதைப் பார்க்கிறோம்.நாங்கள் விமர்சித்தது தவறு என்றால், எங்கள் வார்த்தை கடுமையானது என்றால், இவ்வாறு விமர்சிப்பது பண்பாடற்ற வழிமுறை என்றால், இவர்கள் முதலில் இவ்விமர்சனத்தைச் செய்த அல்லாஹ்வையும், அதனை அப்படியே ஏற்று, அவ்விமர்சன வார்த்தைகளை அந்தத் தவறுகளை செய்த மக்களின் முகத்துக்கு முன் அப்படியே ஓதிக்காட்டிய நபிகள் நாயகத்தையும் நோக்கித் தான் தங்கள் சுட்டு விரலை முதலில் நீட்ட வேண்டும்.
உங்கள் வாதப்படி அல்லாஹ் ‘நாய்’ என்றும், ‘கழுதை’ என்றும்,‘மிருகம்’ என்றும் நாகரீகம் இல்லாமல்: பண்பாடு தெரியாமல்: நளினம் தெரியாமல் விமர்சித்திருக்கிறான் என்று கூறவேண்டி வரும். ஒருவர் குர்ஆன் ஹதீஸ_க்கு எதிராக நடக்கும் போது அவரை நாம் விமர்சித்தால், அதனால் அவர்;கள் ‘புண்படுவார்கள்’ என்பதெல்லாம் அறிவுடையோர் கூறும் பதிலாக முடியாது.
எதைப் பிரச்சாரம் செய்தாலும் பாதிக்கப்படுவோர் புண்படவே செய்வார்கள். இவர்கள் சொல்வதை ஏற்றால் மத்ஹபுகளை, கல்லறை வணக்கத்தை, தரீக்காக்களை, பித்அத்துவாதிகளை மற்றும் எதையுமே விமர்சிக்க முடியாமல் போய்விடும். அத்தோடு, அல்லாஹ்வும் ரஸ_லும் நளினம் தெரியாமல், மென்மை புரியாமல் அநாகரிகமாக விமர்சித்து விட்டார்கள் என்ற தப்பான கருத்தும் வந்து விடும். நஊது பில்லாஹ்.

Read more...

யார் இந்த அபுல் அஃலா மௌலானா மௌதூதி?

Monday, February 7, 2011


சாரத்தைக் கிழித்துக் கைக்குட்டை
தைக்கும் நஷ்டவாளிகள்


இணைவைப்பையே இயற்பெயராய்க் கொண்டவர். புரியவில்லையா? அபுல் அஃலா என்பதற்கு அர்த்தமே அல்லாஹ்வின் தந்தை என்பது தான்.
தலைமையே இப்படிக் கோணலாக இருக்கும் போது இனி இந்த மௌதூதியின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் ஞானிகளான அஷ்ஷெய்க் அகார் முஹம்மதும், மற்றும் இவர்களது இஸ்லாமிய(???) கூட்ட மாமேதைகளும் இஸ்லாத்தைக் குழிதோண்டிப் புதைப்பதொன்றும் ஆச்சரியமில்லை தானே?



இஸ்லாத்துக்கும், ஜமாஅதே இஸ்லாமிக்கும் எந்த சம்பந்ததும் இல்லை என்று யாரும் அவசரப்பட்டுக் கூறிவிடாதீர்கள். அது தவறு. ஏனெனில் சம்பந்தம் உண்டு. அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான சம்பந்தம் என்ன தெரியுமா? இஸ்லாத்தை அழிப்பதற்கென்றே உருவெடுத்தவர்கள் அவர்கள். இதை நாமாகச் சொல்லவில்லை. கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடிக்கவுமில்லை. தமது இதழ்களிலும், உரைகளிலும் அவர்களே இதைப் பகிரங்கமாகவும், தைரியமாகவும், ஏன், மடத்தனமாகவும் ஒப்புக்கொள்வதை நீங்களே பார்க்கலாம் இதோ:
மடமை 1: இவர்களின் சிங்கள வெளியீடான ப்ரபோதய இதழில் பிரசுரிக்கப்படும் அனாச்சாரங்கள் ஏராளம். அதில் ஒன்று தான் இறந்தவர்களிடம் உதவி தேடிப் பிரார்த்திக்கலாம் என்று ஒருமுறை அல்லாஹ்வையே மறந்து எழுதியமை.



மடமை 2: பாவங்களில் மிகப்பெரியது இணைவைத்தலே என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருக்க, இதை அப்படியே அமுக்கிவிட்டு, இவர்களையும், இவர்களது மறைந்த தலைவர் அபுல் அஃலா மௌதூதியின் பெயரையும் நியாயப்படுத்தும் முகமாகப் பாவங்களிலெல்லாம் பெரும்பாவம் கல்லாமையே என்று தமிழ்ப் புராணங்களின் கருத்துக்களை ஏந்திப் பிடிக்கும் அநியாயம்.



மடமை 3: இஸ்லாத்தில் கப்று வணக்கத்தை அறிமுகப்படுத்தி, அதை உலகெங்கும் பரப்பி வரும் ஷீஆக்களை ஆதரிப்பதும், அவர்கள் கொள்கையை சரிகாண்பதும் மட்டுமல்லாமல் இலங்கையில் ஷீஆக் கொள்கையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய மகத்தான பணியைச் செய்ததும் இந்த ஜமாஅதே இஸ்லாமியே. இதற்கான ஆதாரங்கள் இதோ:



அ) ஜமாஅதே இஸ்லாமியின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான காலம்சென்ற எஸ்.எம். மன்ஸூர் அவர்களால் எழுதப்பட்ட ஈரான் மக்கள் புரட்சி என்னும் நூல் மூலமாக ஷீஆக் கொள்கை முதன்முதலாக இலங்கைக்கு அறிமுகப்படுத்தப் பட்டது.
ஆ) அவ்லியாக்களை வழிபடலாம், மற்றும் அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்னும் கருத்தை ஆதரிக்கும் முகமாக ‘ப்ரபோதய’ எனும் இவர்களது சிங்கள சஞ்சிகையில் அவ்வப்போது வெளிவரும் கட்டுரைகள்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க..



தரீக்காக்கள் என்றால் என்ன?
மனிதன், மிருகம், கல், மண்.. என்று எதை வேண்டுமானாலும் அல்லாஹ் என்று அழைக்கத் தயங்காத அத்துவைதக் கொள்கையின் மறுவடிவமே தரீக்கா கொள்கை. இதுமட்டுமா? அல்லாஹ்வுக்கே பாடம் படித்துக் கொடுக்கும் அப்துல் காதிர் ஜீலானி போன்ற மகான்களையே தடுக்கி விழும்போது கூட ‘யா முஹையத்தீன்’ என்று உதவிக்கு அழைக்கும் முஷ்ரிக்குகளும் இந்தத் தரீக்கா வாதிகள் தாம். மேலும் இறந்தவர்களை வணங்குவது, காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வது, நபிவழியை மறுப்பது போன்ற அத்தனை இணைவைப்புக்களையும், அனாச்சாரங்களையும் தமது உயிர்நாடியாகக் கொண்டுள்ளவர்களும் இந்தத் தரீக்காக்கா வாதிகள் தாம். இப்பேர்ப்பட்ட தரீக்காக்கள் தம்மைப்பற்றித் தாம் எழுதியதைவிட ஜமாஅதே இஸ்லாமி தரீக்காவைப் பற்றி எழுதி, அதை விளம்பரப்படுத்தியதே அதிகம். உதாரணத்திற்கு வேண்டுமானால் கடைசியாக வெளிவந்த ஆகஸ்ட் 2009 அல்ஹஸனாத் இதழின் ஆசிரியர் தலையங்கத்தைப் புரட்டிப் பாருங்கள். ‘தரீக்காக்களும், ஏனைய இயக்கங்களும் முஸ்லிம் சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டன’ என்று ஆசிரியர் எழுதியுள்ளதைப் பார்த்த பிறகும் உங்களுக்கு வியப்பாக இல்லையா? சகோதரர்களே, சிந்தியுங்கள்! நரகப் படுகுழியை நோக்கிய தெளிவான நீண்ட பாதையில் இந்த ஜமாஅதே இஸ்லாமி நம் சகோதரர்களை இழுத்துச் செல்வதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால், நாளை மஹ்ஷரில் அல்லாஹ்விடம் நாம் என்ன பதில் சொல்வது? சிந்தியுங்கள்!



கல்வி கற்க வேண்டும் என்னும் கோஷத்திற்கு அடுத்தபடியாக ஜமாஅதே இஸ்லாமி போடும் அடுத்த கோஷம் தான் ‘சமூக ஒற்றுமை’. எவன் எந்தக் கொள்கையில் இருந்தாலும் பரவாயில்லைளூ ஆனால் முஸ்லிம் சமூகம் என்ற அடிப்படையில் ஒரு குடையின் கீழ் அனைவரும் சேர்ந்திருந்தால் மட்டும் போதும் என்பது தான் இந்தக் கோஷத்தின் சாராம்சம். பார்ப்பதற்கு மிகவும் அழகான ஒரு வாதம் தான். நாகப்பாம்பு கூட படமெடுத்து ஆடும்போது அழகாககத் தான் இருக்கும். கையைப் போட்டுப் பார்த்தால் தான் உண்மை புரியும். இந்த ஒற்றுமை இஸ்லாம் போதிக்கும் ஒற்றுமையல்லளூ இஸ்லாத்தை அழிக்கும் ஒற்றுமை. இதே மாதிரியான ஒற்றுமை தான் ஜாஹிலியா யுகத்தில் நபியவர்களையும், அவர்களது தோழர்களையும் அழித்தொழிப்பதற்காக மஜூஸிகளையும், சிலை வணங்கிகளையும், யூதர்களையும், நஸாராக்களையும் ஒன்றுசேர வைத்தது. இஸ்லாத்தின் வரலாற்றில் எங்கு பார்த்தாலும் சத்திய இஸ்லாம் மட்டும் தனித்து நிற்கும். அதனை எதிர்த்து ஏனைய அனைத்து சக்திகளும் ஒன்றுதிரண்டு நிற்கும். அது அப்படித் தான் எப்பொழுதும் இருக்கும் என்று அல்லாஹ்வே சொல்கிறான்: (குர்ஆன்-3:173)



சரி, ஒரு பேச்சுக்காக ஜமாஅதே இஸ்லாமியின் வாதப்படியே வேறுபட்ட கொள்கைகளிலிருக்கும் அனைவரும் ஒன்றுபட்டே தான் இருக்க வேண்டுமென்றே வைத்துக் கொள்வோமே. அப்படியானால் ஷீஆக்களோடும், கப்று வணங்கிகளோடும், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கவாரிஜ்களோடும், ஏன் அரசியல்வாதிகளோடும் கூட கூட்டு வைத்துக் குலாவிக் கொஞ்சும் இந்த ஜமாஅதே இஸ்லாமி ஏகத்துவவாதிகளை மட்டும் ஏன் ஒதுக்கி வைத்து விமர்சிக்கின்றது? தூய சத்தியத்தில் மட்டும் நாம் தனித்து நிற்பதாலா? ஆம். இதுமட்டுமல்லளூ இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன:



அ) ஜமாஅதே இஸ்லாமியின் கொள்கையும், வழிகெட்ட ஏனைய கூட்டங்களின் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று பொருந்திப் போகும் அதேவேளை தவ்ஹீதை விட்டும் தூரமாக இருப்பது.



ஆ) தமக்கு நெருக்கமாக உள்ள இந்த வழிகெட்ட கொள்கைகளுடன் கூட்டு வைத்து இலங்கையின் ஆட்சியைப் பிடிக்கும் உள்நோக்கம் மட்டுமே இவர்களது பிரதான இலக்கு.



இதைக் கூட நாமாகக் கண்டுபிடித்து சொல்லவில்லை. அவர்களின் வாக்குமூலமே இதைப் பின்வருமாறு உறுதிப்படுத்துகிறது:
ஆகஸ்ட் 2009 அல்ஹஸனாத்தில் ‘ரமழான் பன்பாடுகளின் பயிற்சிப் பட்டறை’ எனும் தலைப்பில் சகோ. அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் (நளீமி) அவர்களது கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டது. பார்ப்பதற்கு இக்கட்டுரை கோமாளித்தனமாக இருந்தாலும் அதன் விளைவு எவ்வளவு பாரதூரமானது என்பது நடுநிலையோடு பார்க்கும் எவருக்கும் புரியும். இக்கட்டுரையில் இவர் இரவுத் தொழுகையின் விடயத்தில் எவ்வாறு ஏனைய கட்சிகளுடன் சமரசம் செய்து, கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் எனும் உள்நோக்கத்துடன் தந்திரோபாயம் செய்வதாக நினைத்துக்கொண்டு மடத்தனமாக உளறியிருக்கிறார் என்று நீங்களே பாருங்கள். ‘முஸ்லிம்களுக்கு மத்தியிலுள்ள உட்பூசல்களுக்கும், சர்ச்சைகளுக்கும் காரணம் அறியாமையும், அறியாமையும் மோதுவதாகும்.’ அதாவது ஜமாஅதே இஸ்லாமி, தரீக்கா, ஷீஆ ஆகிய இவர்களது கூட்டணி தவிர்ந்த தவ்ஹீத் வாதிகள் தாம் மடையர்கள். இம்மடமை இன்னொரு மடமையான தப்லீக்கோடு மோதும் போது இவ்வாறு பிரச்சினை ஏற்படுகின்றது என்பது தான் இவரது வாதம். அதேவேளை இவர் சொல்வது போல் அறிவும் அறியாமையும் மோதுவதால் பிரச்சினை ஏற்படாது. ஆக, இவர்களது கூற்றுப்படியே வைத்துப் பார்த்தால், தவ்ஹீத் வாதிகளாகிய நாம் மடையர்கள். ஜமாஅதே இஸ்லாமியின் அதிபண்டிதர்களான நீங்கள் அறிவாளிகள். இங்கு அறிவும் (ஜமாஅதே இஸ்லாமியும்), அறியாமையும் (தவ்ஹீதும்) கலந்துரையாடுவதாலோ, விவாதிப்பதாலோ எந்தப் பிரச்சினையும் ஏற்படப் போவதில்லையே! நல்ல பலன் தானே கிட்டப் போகிறது என்பதைப் பகிரங்கமாகப் பறைசாற்றும் உங்களுக்குத் தானே நாம் எத்தனையோ தடவைகள் ‘கலந்துரையாடலாம் வாருங்கள்’ என்று கெஞ்சாத குறையாய் அழைப்பு விடுத்தோம். எந்த அழைப்புக்கும் ஏன் நீங்கள் பதிலளிக்கவில்லை? ஏன் எமது அழைப்பை மதித்து வரவில்லை? ஏ.சீ. அகார் அவர்களை ஏசாத குறையாகப் பலதடவை அழைத்தும், ஏசீ ரூமுக்குள் தானே பதுங்கியிருக்கிறார்! ஹஜ்ஜுல் அக்பரைப் ஹஜ்{க்குப் போவதை விடப் பலமடங்கு அலைந்தலைந்து துரத்தித் துரத்திப் பேச அழைத்தும், பலன் தான் என்ன? தெருநாய் துரத்தத் தலைதெறிக்க ஓடும் நொண்டிப் பிச்சைக்காரனைப் போல நம்மைக் காணுமிடமெல்லாம் ஒளிந்தோடுவது மட்டுமே அவரது வேலையாக இருக்கிறது. மின்ஹாஜ் மௌலவியோ ஒருபக்கம் அப்பிராணி. பேச அழைக்கும் நேரத்திலெல்லாம் அப்பாவித்தனமாக தலைமையிடம் தான் கேட்க வேண்டுமென்று தலையைப் பாவித்துத் தப்பிக் கொள்வார்.
நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். உங்களின் வாதப்படியே உங்களை மீண்டும் ஒருமுறை பேச அழைக்கிறோம். இதற்காவாவது நேர்மையான முறையில் ஒரு பதில் தாருங்கள். அதாவது ‘ஜமாஅதே இஸ்லாமி இஸ்லாமிய வரையறைக்குள் இல்லை. ஜமாஅதே இஸ்லாமி ஒரு தனி மதம்’ என்பது தான் எமது வாதம். இதை நாம் இன்ஷா அல்லாஹ் நிரூபிப்போம். அறிவாளிகள் என்று உங்களை நீங்கள் கருதினால், கருத்தோடு கருத்து மோத நேருக்கு நேர் எம்மை எதிர்கொள்ள முன்வாருங்கள். இதற்கு நீங்கள் பயந்து ஓடி ஒளிய மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஆம், ஓடியொளிவதற்குத் தான் இதில் என்ன இருக்கிறது? நாம் என்ன உங்களை அடித்துக் கொல்லவா போகிறோம்? நேருக்கு நேர் நின்று நாகரீகமான முறையில் பேசித் தானே தீர்த்துக் கொள்ளப் போகிறோம். நீங்கள் சத்தியத்தோடிருந்தால் நீங்கள் ஏன் பயப்படப் போகிறீர்கள்? ஆகவே நாம் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம். இதற்கும் பதிலில்லாமல் இன்னும் நீங்கள் மௌனமாக இருந்தால், உங்களைப் பொய்யர் என்றும், பேடிகளென்றும் அழைப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ஏனெனில்,
வீண் சண்டைக்குப் முன்வராதவன் மிதவாதிளூ பாராட்டுக்குரியவன்ளூ எனவே பாராட்டுகிறோம். வாயால் அறிவுபூர்வமாகப் பேசித் தீர்க்க முன்வராதவன் பொய்யன், பேடிளூ தோலுரிக்கப்படவேண்டியவன்ளூ எனவே தான் இங்கு தோலுரிக்கிறோம்.
அடுத்ததாக இவர்களது அக்கட்டுரை தராவீஹ் தொழுகையைப் பொருத்தவரை (அப்படியும் ஒரு தொழுகையா???) 8 ரக்அத்துகளுக்கு தெளிவான ஆதாரங்கள் உண்டு என்று கூறிவிட்டு, ஏனையவை தெளிவற்ற ஆதாரம் என்பதைத் தன்னையறியாமலே ஒத்துக் கொள்கிறார். எந்த சத்தியத்தை மறைக்க நினைத்தாரோ, அதை அவரது வாயிலிருந்தே அல்லாஹ் வெளிப்படுத்தி விட்டான். யாராவது 8 ரக்அத்துகள் தொழுதால் அவர்களைக் குழப்பவாதிகள் என்று சொல்லக் கூடாது என்று இவர் முதலைக் கண்ணீர் வேறு வடிக்கிறார். ஆடு நனைவது உண்மையில் ஓநாய்க்குக் கவலையென்றால் இவர்களின் இதழ்களில் ‘ஒன்றுபட்ட உம்மத்தை இரவுத் தொழுகை மூலம் பிரித்ததே தவ்ஹீத் வாதிகள் தாம்’ என்று ஊளையிட்டது ஏன்? அதேநேரம் 20 ரக்அத்துகளுக்கு ஆதாரம் இல்லாமலில்லையென்று கூறும் இவரும் இவரது சகாக்களும் வரலாறு நெடுகிலும் ஒரு சரியான ஆதாரத்தையாவது நபிவழியிலிருந்து எடுத்துக் காட்டினார்களா? நீங்கள் பக்கம் பக்கமாக எழுதி, உங்கள் மேதாவித்தனத்தைக் காட்டவேண்டிதேயில்லை. இரண்டே வரிகளில் நாம் அடங்கிப் போகும் வண்ணம் 20 ரக்அத்துகளுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸிலிருந்து ஒரேயொரு சான்றைக் காட்டிவிடுங்களேன். பிரச்சினை முடிந்து விடும். காட்டவே மாட்டீர்கள்ளூ உலகம் அழியும் வரை நாம் கத்தினாலும் உங்களால் காட்ட முடியாது. இருந்தால் தானே காட்ட முடியும். நீங்கள் பொய்யர்களென்பது உங்கள் ஜமாஅத் உறுப்பினர்கள் கூட அறிந்த விடயம் தானே. அதனால் நீங்கள் ஆதாரம் காட்டாமல் ஒளிந்தோடுவதால் ஒன்றும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும் கோமாளிக் கும்பலின் சலவை செய்யப்பட்ட மூளைகளெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் தெளிவடைந்து விடாது என்றே நினைக்கிறோம்.



‘ஹரம் ஷரீபின் வரலாறு நெடுகிலும் 20 ரக்அத்துக்களே தொழுவிக்கப்பட்டு வருகின்றன.’ என்று வாய்கூசாமல் இவர் சொல்லியிருப்பது இவரது அடுத்த பொய். வரலாறு என்று இவர் குறிப்பிட்டது ஆதம் நபியிலிருந்தா? மக்கா வெற்றியிலிருந்தா? அல்லது நபியும் ஸஹாபாக்களும் மறைந்த பின்னரிலிருந்தா? அல்லது இவர் மௌலவிப் பட்டம் பெற்றதிலிருந்தா? தவ்ஹீத் வாதிகள் பின்பற்றும் நபிகளாரின் காலத்தில் ஹரம் ஷரீபில் 20 ரக்அத்துகள் தொழுவிக்கப்படவில்லை. நீங்கள் கூறும் வரலாற்றில் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) என்ற ஒரு பாத்திரம் இருந்ததா? அல்லது மௌதூதி தான் முஹம்மத்(ஸல்) அவர்களின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டாரா?



‘உலகின் பல நாடுகளில் 20 ரக்அத்துகளே நடைமுறையில் உள்ளன. இதனால் தராவீஹ் 20 ரக்அத்துகள் என்பதும் சரியே’ என்பது இவரது அடுத்த வாதம். உலகின் பல நாடுகளில் ஷீஆக்கள் விபச்சாரத்தை ‘முத்ஆ’ எனும் போலியான சட்டத்தின் மூலம் நியாயப்படுத்துகின்றனர். இன்னும் பல நாடுகளில் இறந்தவர்களை கடவுளென்கின்றனர். வேறு பல நாடுகளில் காபிரைத் திசைதிருப்புமுகமாக எப்பேர்ப்பட்ட பெரும்பாவத்தையும்  ‘தக்கிய்யா’ என்னும் சட்டத்தின் அடிப்படையில் செய்யலாமென்ற கிறுக்குத்தனமான வாதத்தை  நியாயப்படுத்துகின்றனர். இன்னும் பல நாடுகளில் குறைந்த வட்டியை ஹலாலென்கின்றனர். இசையையும், மதுபானத்தையும் கூடுமென்கின்றனர். சில நாட்டு அறிஞர்களோ ஏகத்துவத்தைக் கூறும் இக்ஃலாஸ் அத்தியாயத்துக்கு தப்ஸீர் எனும் பெயரில் அத்துவைதத்தைக் கற்பிக்கின்றனர். இதுபோன்று உலகின் பல நாடுகளில் வரலாறு நெடுகிலும் நடந்துகொண்டிருக்கும் இத்தீமைகளையும் தராவீஹை நீங்கள் நியாயப்படுத்தியது போன்று நியாயப்படுத்த வேண்டிது தானே? அவற்றை மட்டும் ஏன் விட்டு வைத்தீர்கள்? என்று உங்களிடம் கேட்க முடியாது. ஏனென்றால் இவ்வனைத்து விடயங்களும் உலகின் பல நாடுகளிலும் உங்கள் கூட்டத்தைச் சார்ந்த அறிஞர்களாலும், இயக்கவாதிகளாலுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, இரவுத் தொழுகைக்கு 20 ரக்அத்துக்கள் என்பதற்கு குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஆதாரம் காட்டாமல் உலக நாடுகளை நீங்கள் ஆதாரம் காட்டுவது ஒன்றும் ஆச்சரியமில்லை.



அதிகமான மக்கள் செய்வது ‘முத்தவாத்திர் அமல்’ என்று அரபி வார்த்தையைப் பிரயோகித்து இதை வாசிக்கும் ஜமாஅதே இஸ்லாமி பொதுமக்களுக்கு அவர் கூறிக்கொள்ளும் உண்மை என்னவென்றால், ஜமாஅதே இஸ்லாமியின் வாசகர்கள் அரபு தெரியாத மடையர்கள். நாம் என்ன சொன்னாலும் எதிர்க் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று பறைசாற்றுவதே.



சகோ. அகாருக்கு முடியுமானால் ‘முத்தவாத்திர் அமல்’ என்பதை அடுத்த முறை தமிழில் மொழிபெயர்த்துப் போட்டுக் காட்டட்டும். முத்தவாத்திர் என்பது ஹதீஸ்கலையில் நபிகளாரின் ஒரு செய்தியை ஸஹாபாக்களிலும், தாபிஈன்களிலும், தப்உத் தாபிஈன்களிலும் பத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையினரால் அறிவிக்கப்படும் ஆதாரபூர்வமான செய்தியைக் குறிக்கும். இவர் வாதப்படி முஸ்லிம்களே அல்லாத காபிர்களில் அனேகமானவர்கள் (முத்தவாத்திர்) செய்யும் செயலான (அமலி) சிலைவணக்கத்தைக் கூட முத்தவாத்திர்; அமல் என்று செய்வது கூடும். ‘முரண்பாடுகளின் மொத்த வடிவமே நானும் எனது ஜமாஅதே இஸ்லாமி உலமாக்களும் தாம்’ என்பதை சகோ. அகார் அவர்கள் தெளிவாகக் கூறி மக்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டார். இதற்குப் பிறகும் அகார் அவர்கள் தனக்குத் தானே முரண்பட்டுப் பேசமாட்டார் என்று மக்கள் விளங்கினால், அதற்கு சகோ. அகார் அவர்கள் பொறுப்பல்ல என்பதை பின்வரும் முரண்பாடு எடுத்துக் காட்டுகிறது:



அதாவது, தராவீஹின் ரக்காத்துக்கள் எட்டா? இருபதா? என்று சர்ச்சை ஏற்படக் காரணம் அது  ‘நபில் முத்லக்’ என்ற அந்தஸ்தைப் பெற்றிருப்பதாலாம். இவ்வாறு கூறிவிட்டு ‘நபில் முத்லக்’ என்றால் என்னவென்று கூறாமல் இவரது ஸ்டைலிலேயே விட்டுவிட்டார். என்ன செய்ய? நாமாவது அதன் அர்த்தத்தை சொல்லித்தானே ஆகவேண்டும். நபில் முத்லக் என்பது ரக்காத்துக்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படாத உபரியான(நபில்) தொழுகை. இவர் வாதப்படி இரவுத் தொழுகை நபில் முத்லக் என்றால், 8 ரக்காத்தக்கு தெளிவான ஆதாரம் உண்டு என ஆரம்பத்தில் குறிப்பிட்டு ரக்காத்துகளை வரையறை செய்தது எவ்வாறு? இல்லாத இருபதை உள்ளது என்று இரவுத் தொழுகையை வரையறுத்தது நாமா? நீங்களா? இமாம் அஹ்மத் அவர்களைக் காட்டி இரவுத்தொழுகையை உலக வரலாற்றில் முதன்முறையாக 36 ரக்அத்துக்களென என வரையரை செய்தது யார்?

தர்க்க ரீதியாக பார்த்தாலும் உங்கள் வாதம் மிகவும் அபத்தமானது. நாமாவது இரவுத் தொழுகையை 8 என்று மட்டுமே வரையறுத்தோம். நீங்களோ 8, 20, 36 என மூன்று வரையறைகளை கூறுகிறீர்கள். ஒரு குறித்த விடயத்துக்கு 3 வரையறைகள் இருக்குமானால் அது வரையறுக்கப்படாதது என்று அர்த்தமா? அல்லது வரையறுத்தே ஆகவேண்டும் என்பதற்காக வலிந்து வரையறுக்கப்பட்டதா? எம்மைவிட வலிந்து வரையறை செய்த நீங்கள், அடுத்த வினாடியே வரையறையற்றது எனக் கூறுவது, நீங்கள் முரண்பட்டுத்தான் பேசுவீர்கள் என்பதை மேலும் மக்களுக்கு தெளிவாகப் பறைசாற்றுவது ஆகாதா? இன்னும் இதில் வேடிக்கை என்னவென்றால், இரவுத் தொழுகையை 8, 20, 36 என வரையறுத்துவிட்டு, பின்னர் ‘வரையறை அற்றது’ என்று தனக்குத் தானே முரணாகவும் எழுதிவிட்டு, முடிவில் தொழாமலும் இருக்கலாம் என்று முரண்பாட்டுக்கே முரண்பாடு கற்பித்து உள்ளீர்களே! உங்களை எந்தக் கூட்டத்தில் சேர்ப்பது?


நபிலுக்கும் சுன்னத்துக்கும் வேறுபாடு தெரியாத உங்களை உங்கள் பாஷையில் புகழ்வதென்றால் ‘நீங்கள் அறிவாளிகள்’. உங்கள் அறிவையும், அறிவையும் மோதவிட்டு இந்த முரண்பாட்டுக்கு விளக்கம் தர வேண்டும். விளக்கம் தந்தால் நீங்கள் அறிவாளி(?) நாங்கள் பொய்யர். விளக்கம் தரவில்லையென்றால் நீங்கள் பொய்யர். எப்படி வசதி?

சிலாபம் தவ்ஹீத் ஜமாஅத், இலங்கை.

Read more...

சத்தியத்தை அழிக்க முனையும் சந்தர்ப்பவாதிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!


அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

எமது கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக் தவ்ஹீத், தப்லீக் ஆகிய இரண்டு ஜமாஅத்தின் அங்கத்தவர்களும் எவ்வித பிரச்சினையுமின்றி, ஒற்றுமையாக தத்தமது பள்ளிகளில் செயற்பட்டு வந்தனர். இதன்போது, உலகில் தடை செய்யப்பட்ட, பயங்கரவாதிகளின் பட்டியலிலுள்ள அல்-இக்வானுல் முஸ்லிமூன் என்ற இயக்கம் ‘னுயு ஆகுஊனு’ என்ற பெயரில் இரகசியமாக மூன்றாவது (3சன Pயசவல) ஜமாஅத் திடீரென சிலரால் உருவாக்கப்பட்டது.
இவர்கள் நமது ஊரில் தமது இரகசிய திருகுதாளங்களை ஆரம்பிக்கும் போது, நாங்கள் இரண்டு ஜமாஅத்களையும் ஒற்றுமைப்படுத்த வந்தவர்கள் என்று தான் கூறினார்கள். எனினும் ஊரில் உள்ள கொள்கை தெளிவற்ற சிலரையும் அரைகுறைகள் சிலரையும் தங்கள் மூன்றாம் ஜமாஅத்தில் இணைத்துக் கொண்டு இரகசியமாகச் செயற்பட ஆரம்பித்தார்கள். இவர்களின் மார்க்க – சட்ட விரோத நடவடிக்கைகளை நன்கு உணர்ந்த எமது ஊர் தவ்ஹீத்வாதிகள், இவர்களின் கொள்கையற்ற கோமாளித் தனங்களை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்ய ஆரம்பித்தனர்.
இவர்களின் சதித்திட்டங்களை தெளிவாக அறிந்து கொண்ட தவ்ஹீத்வாதிகள், இவர்கள் உண்மையில் பிரவினைவாதிகள், ஊரை மூன்றாகப் பிரித்து சண்டை மூட்ட வந்தவர்கள் தான் என்பதைப் புரிந்து கொண்டதால், இவர்களுக்கு மிகப் பொருத்தமாக மூன்றாவது பிரிவினை ஜமாஅத் (3சன Pயசவல) எனப் பெயர் சூட்டினார்கள். தல்கஸ்பிடியில் இந்த மூன்றாவது ஜமாஅத் (3சன Pயசவல) இதுவரை என்னதான் செய்துள்ளது? அமைதியாக இருந்த ஊரைப் பிரித்து, சண்டை மூட்டி, மொட்டை நொடீஸ் வெளியிட்டு, பலர் மீது அவதூறு பரப்பி, பொய் வழக்குப் போட்டதைத் தவிர உருப்படியான எந்த ஒரு வேலையையும் இவர்கள் இதுவரை செய்யவில்லை. இவர்களின் இயக்கம் உருவான எகிப்திலும் இவர்கள் புகுந்த நாடுகளிலெல்லாம் பிரச்சினைகளையும் சண்டைகளையும் கொலை வெறித்தனத்தையும் ஷிர்க்,பித்அத்களையும் பயங்கரவாதத்தையுமே உருவாக்கிவருகிறார்கள்.அந்த வெறித்தனங்களைத்தான் இலங்கையிலும் குறிப்பாக எமது ஊரிலும் ஏற்படுத்த படாதபாடுபடுகின்றார்கள்.
ஒரு கிராமத்தின் இரண்டு கண்களாக பள்ளிவாசலும் பாட சாலையும் திகழ்கிறது. இந்த இரண்டு கண்களையும் குத்திக் குருடாக்க இவர்கள் முயற்சிக்கின்றார்கள். இதற்கு நாம் அனுமதியளிக்கக் கூடாது. எங்களிடம் தான் மெத்தப்படித்த மேதாவிகள் இருக்கின்றார்கள் என்று அடிக்கடி கூறித் திரிகின்றார்கள். ஆனால், இவர்களில் அதிமானவர்கள் மார்க்க அறிவில் குறைமாதக் குழந்தைகள்.ஒரு இயக்கத்தில் அல்லது கட்சியில் டீ.யு.இ ஆ.யு.இ Phன.இனுழஉவழசஃநுபெiநெநசஇ யுபுயு என்று சில உலகியல் விசயம் படித்தவர்கள் இருக்கின்றார்கள் என்பதற்காக ஒரு கொள்கை சரியாக இருக்க முடியும் என்று கருத இயலாது. படித்தவர்கள் எல்லாம் நேர்வழியில் தான் இருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஏனெனில், இன்று எமது நாட்டில் படித்துப் பட்டம் பெற்ற பல முஸ்லிம் அறிவுஜீவிகள்(?)நாஸ்திகனாக இருக்கின்றார்கள். இந்தப் படிப்பாளிகள் தமது படிப்பைக் காட்டி கொழுத்த சீதனம் வாங்குகின்றனர். ஏமாற்றுகின்றனர். கொள்ளையடிக்கின்றனர். நன்றாக படித்த எத்தனையோ டொ(க்)ட்;டர்களும் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை தினமும் பத்திரிக்கைகளிலும் செய்தி வாயிலாகவும் அறிந்து வருகிறோம்.  அண்மையில் ஒரு டாக்டர் மருவத்துவத்திற்கு வரும் பெண்களை தப்பாக நடத்தி அது வெளி உலகிற்கு தெரிந்து இப்போது கம்பி எண்ணுகின்றார்.
அன்றைய காலத்தில் கூட இஸ்லாத்தை முதலில் விளங்கி, ஏற்றவர்கள் பிலால(ரழி);,யாஸிர்(ரழி), அம்மார்(ரழி),சுமைய்யா(ரழி) போன்ற படிக்காதவர்கள்தான். இந்த உன்னத சஹாபாக்கள் எந்த பல்கலைக்கழக வாயிலையும் மிதிக்காதவர்கள்;. அவர்கள் தான் இறுதிவரையும் உறுதியான இஸ்லாத்தின் பால் நிலைத்து இருந்தனர். இறுதி நபிக்கே எழுவும் படிக்கவும் தெரியாது என்பது இந்த மேதாவிகளுக்குத் தெரியாதா? நபியவர்கள் இப்போது அனுப்பப்பட்டிருந்தால், படிக்காத நபி என்று இவர்கள், நபியவர்களைப் புறக்கணித்;துவிட்டு, படித்த இன்றைய நவீன அபூ ஜஹ்ல்களுடன் இணைந்திருப்பார்கள். ஜாஹிலிய்யாக் கால – அறியாமைச்- சமூகத்தில் இருந்த, அபுல் ஹிகம் – ஞானத்தின் தந்தை – என்று பெயர் பெற்ற அபூ ஜஹ்ல் தவ்ஹீதை ஏற்காததால்,  படித்த அதி மேதையான அவன் நபியவர்களால் மடமையின் தந்தை என பட்டப் பெயர் சூட்;டப்பட்டான். உங்கள் மலட்டு வாதப்படி படித்தவர்கள்தான் நேர்வழியில் இருப்பார்கள் என்பது உண்மையானால் அமெரிக்காவிலுள்ள, இஸ்ரவேலிலுள்ள, ரஷ்யாவில் இதுபோன்ற நாடுகளிலுள்ள உங்களை விட படித்தவர்கள் இக்வான் (3சன Pயசவல) இயக்கத்தில் இணைந்திருப்பார்களே! ஆனால் அவர்கள் படித்தும் ஏன் குப்ரில் இருக்கின்றனர். இதற்கு இந்த 3சன pயசவல பதில் சொல்லுமா?
வழி கேடு எது? சுத்தியம் எது? என்பதை அறியாத Phன-யை விட ஷிர்க் செய்யாத தவ்ஹீத்வாதியே படித்தவர்களை விட அல்லாஹ்விடம் உயர்ந்து விளங்குகின்றான். அவனுக்குத் தான் கண்ணியமும் மறுமை வெற்றியும் உண்டு என்று  குர்ஆன் கூறுகிறது.
உலகக் கல்விக்கும், மார்க்கக் கல்விக்கும் நிறையவே வேறுபாடு உள்ளன. இவர்கள் எங்களிடம் தான் படித்தவர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்வதில் உண்iமாளர்களாக இருப்பார்களேயானால் பொது மேடை ஒன்றில் யார் சரி என்று விவாதிக்க வரட்டும். அப்போது உண்மையில் யார் படித்தவர்கள்? யார் மார்க்கம் தெரியாதவர்கள் என்று மக்களுக்கு நன்றாகவே புரிந்து விடும்.

இவர்களின் படித்த மகா ஞானம் எந்த அளவுக்கு பளிச்சிடுகிறது என்றால், இவர்களின் குருநாதரிலிருந்து அடிமட்ட உறுப்பினர் வரைக்கும் உள்ளவர்களுக்கு பள்ளிக்கும் தர்ஹாவிற்கும் வித்தியாசம் தெரியாது. நபிகளாரின் சுன்னத்திற்கும் சிலரால் உறுவாக்கப்பட்ட பித்அத்களுக்கும் வித்தியாசம் தெரியாது. அதனால்தான் இலங்கையில் உள்ள தர்ஹாக்கள் அனைத்தும் முஸ்லிம்களின் வரலாற்றுச் சின்னம் என்று சின்னத்தனமாக உளறித்திறிகின்றனர். இவர்களின் குரு ஒரு தடவை ஒரு ஆலிமை சந்தித்து உறையாடச் சென்றார். அப்போது அந்த ஆலிம் மன்சூர்! உனக்கு உலக விவகாரங்கள் சில தெரிந்திருக்கின்றன. ஆனால் குர்ஆனும் சுன்னாவும் தெரியவில்லை, போய் படித்துவிட்டு வா என்று கண்ணத்தில் அரைந்தாற்போல் கூறிவிட்டார். இவருக்கு குர்ஆனைப் பற்றிய அறிவு அறவே இல்லை என்பதை இவருடைய இரண்டு வீசீடிகளிலிருந்தே Pது அண்மையில் தெளிவு படுத்தியுள்ளார். அக்குரணை தவ்ஹீத் சகோதரர்களிடம் ஒன்றை உளறிவிட்டு, அதற்கு நேர் மாற்றமாக இன்னொன்றை ஏஊனு யிலும் பச்ச முனாபிக் தனமாகக் கூறுகிறார். இத்தகைய உஸ்தோது மன்சூரின் அர்த்தமற்ற, பொய்யான விமர்சனங்களுக்கு Pது அளித்துள்ள 3ஏஊனு களையும் பார்ப்போர், இவர்களின் குரு நாதரின் அறிவுத் தரத்தை அறிந்துகொள்வார்கள். அக்குருணை தவ்ஹீத் சகோதரர்களால் (யுர்யுனு மூலம); வெளியிடப்பட்ட மன்சூரின் விமர்சனத்திற்கு Pதுயின் பதில்கள் என்ற 3ஏஊனு களையும் பார்க்கவும்.
மூன்றாவது ஜமாஅத்தில் இருக்கும் பலருக்கு கொள்கைத் தெளிவு இல்லை. தமது இயக்கத்தின் சரியான பெயர் கூடத் தெரியாது. தெரிந்த சிலர் பெயரைச் சொல்ல துணிவு இல்லாதவர்கள். தமது இயக்கத்தின் பெயரைக் கூட சொல்லத் துணிவு இல்லாத மாவீரர்கள் தான் நாளைக் கழித்து இலங்கையில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளையும் ஏனைய அரசியல் கட்சிகளையும் இயக்கங்களையும் அழித்து விட்டு, இஸ்லாமிய கிலாபத்தைக் கொண்டு வரப் போகின்றார்களாம்! இவர்களின் மலட்டு ஆசையையும் போலிக் கோஷத்தையும் கேட்க உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா?இவர்களை நம்பி பின்னால் அலைபவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.அத்தகையவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
தவ்ஹீத் பள்ளிக்குள் நுழைந்து ஆக்கிரமிக்க முனைந்தார்கள். எனினும் உண்மையான எந்தத் தவ்ஹீத் வாதியும் இவர்களின் மாய வலையில் விழவில்லை. இவர்களின் சதித்திட்டங்களை தவ்ஹீத்வாதிகள் நன்கு புரிந்துகொண்டார்கள்.தெளிவில்லாத சில அரைகுறைகள் பின்னால் அலைய ஆரம்பித்தனர். இதனால், தவ்ஹீத் பள்ளிக்கு பல நன்மைகள் ஏற்பட்டனவே தவிர எந்த விதப் பாதிப்பும் அல்லாஹ்வின் அருளால் ஏற்பட வில்லை.

எனவே, பாடசாலைக்குள் தமது ஆதிக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக நுழைக்க ஆரம்பித்தனர்.டுவுவுநுயின் கொலை டுளைவல் உள்ள,நிலாவெளியைச் சேர்ந்த ஆச.துவான் ஆரிபீன் என்பவரையும் அவரது தம்பியையும் பாடசாலைக்குள் கொண்டுவந்தனர். இவர்கள் இருவரும் பாடசாலையின்; பாட திட்டத்தை படிப்பிப்பதில்லை. மூன்றாம் ஜமாஅத்தையே வளர்த்தனர். ஒவ்வொரு பாடத்திலும் தவ்ஹீத்வாதிகளை கொச்சைப்படுத்தி வம்புக்கு இழுத்தனர். பள்ளி மௌலவியை லெப்பை என்று கொச்சைப்படுத்தினர். தஜ்வீது பாடத்தை சரியாக படித்துக் கொடுக்க மௌலவிக்கு கட்டளையிட்டார் ஆரிபீன். தவ்ஹீத் பள்ளி மௌலவி ஒருவருக்கு நன்றாகப்படித்துக் கொடு என்று கட்டளையிட இவர் யார்?இவருக்கு என்ன தகுதியும் அதிகாரமும் உள்ளது?
ஆம், இவருக்கு ஈஸா (அலை) அவர்கள் உயிரோடு உள்ளார் என்பதும் தெரியாது. மத்ஹபு வழிகேடு என்பதும் தெரியாது, கூட்டுத் துவா பித்அத் என்பதும் தெரியாது. ஆரிபீன் என்பவர் மார்க்கம் தெரியாத மாமேதை. மற்றவர்களுக்கு லெப்பை என்று இழித்துறைக்கினறார். ஒரு பாடசாலையில் அதற்கென்றுள்ள பாடதிட்டத்தைத் தான் படிப்பிக்க வேண்டும்.அதற்காகவே அரசாங்?????????????????????????? இந்த குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத ஒரு ஆசிரியர் எதற்கு இந்த ஊர் பாடசாலைக்கு? பாடசாலையில் செலபசைப் படிப்பிற்க வேண்டிய பொன்னான நேரத்தை அராஜகம் பண்ணியதோடு, இவரால் கடமைத் துஷ்பிரயோகமும் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, தல்கஸ்பிடியிலுள்ள எவனுக்கும் எனது மயிரையும் பிடுங்க முடியாது என்று ஆச.ஆரிபீன் வீர வசனம் பேசி எதுவும் செய்ய முடியாத அப்பாவி மாணவர்களிடம் வீராப்புக் காட்டியுள்ளார். இது தானோ மெத்தப் படித்த 3சன Pயசவல யின் அதி மேதாவித் தனமோ? இந்தத் துஸ்பிரயேகத்திற்கும் வாய்க் கொழுப்பிற்கும் சரியான மருந்தை ஹொஸ்பிடலில் மல்லாந்து கிடந்த போது கிடைத்ததை விட ஊர் மக்கள் அதிகமாகவே கொடுத்து விட்டனர்.
தவ்ஹீத் கொள்ளையும், தப்லீக்கும் பிழை. 3சன pயசவலயான நாங்கள் சொல்வதுதான் சரியானது என்று புழுகு மூட்டைகளையும் போலிகளையும் அள்ளிவிட்டுள்ளார். இவர்கள் இரண்டு ஜமாஅத்திற்கும் விரோமானவர்கள் எனபது இதிலிருந்து புலப்படுகிறது. இவர்களின் சதியை தவ்ஹீத் சகோதரர்கள் மிகச் சரியாக உணர்ந்து கொண்டு விட்டார்கள். பாட வேலையில் தப்லீக்கும் பிழை, தவ்ஹீதும் பிழை. ஆனால், மூன்றாம் ஜமாஅத்துத்தான் சரி என்று துவான் ஆரிபீன கூறும் அளவுக்கு உள்ள 3சன Pயசவல யின் அந்த உலக மகா தத்துவத்தைக் கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்க பாப்பா?! அலசிப் பார்ப்போம். அப்போது உளரல் சாயம் ஊரறிய வருமல்லவா? இரால் மண்டையில் பீயை வைத்துக் கொண்டு நாற்றம் என்று சொல்வது போன்று, அத்தனை தவறுகளையும் பொய்களையும் போலிகளையும் தங்கள் தலையில் சுமந்துகொண்டு, மற்றவர்கள் மீது வீண் பழி சுமத்துவதும் அவதூறு பரப்புவதும், மார்க்கம் என்ற பெயரால் உளறுவதும் உங்கள் வழிமுறைதானே?அதனால் தானே மக்கள் புறக்கணிக்கின்றனர்.


அண்மையில் எமது ஊரில் ஒரு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. அதைக் கண்டித்து மத்ஹபுக்கும் மார்க்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஒரு ஆசிரியை காலைக் கூட்டத்தில் பேசியுள்ளார். தவ்ஹீத் இளைஞர்களை காவாலிகள் என்று திட்டியுள்ளார். பாடசாலை மாணவர்களை துண்டுப் பிரசுரம் வினியோகிக்க பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார். பாடசாலை ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரைக்கும் தான் மாணவர்கள் பாடசாலைக் கட்டுப் பாட்டை மீறக் கூடாது. பாடசாலை விட்டதற்கு பின்னால் மாணவர்கள் ஈடுபடும் எந்தக் காரியத்தையும் பாடசாலை நிர்வாகம் விசாரணை செய்ய முடியாது. நாங்கள் கேட்கின்றோம், நாங்கள் சில மாணவர்களை பாடசாலை அல்லாத நேரத்தில் தஃவாவிற்குத் தான் பயன்படுத்தினோம். எனினும் நீங்கள் எல்லோரும் முழுப் பாடசாலையையும் உங்கள் இயக்க வளர்ப்பு வெறித்தனத்திற்கு பயன்படுத்துகின்றீர்களே. அவ்வாறாயின் உங்கள் வாதப்படி நீங்கள் தான் உண்மையான காவாலிகள். உயர் தர வகுப்பு, மற்றும் 10 ஆண்டு மாணவர்களுக்கு ஒரு கட்டுரையின் தலைப்பைக் கொடுத்து – அல்ஹஸனாத், மீள்பார்வை இன்னும் இது போன்ற 10க்கும் மேற்பட்ட வழிகேட்டுக் கென்றே பெயர் பெற்ற சஞ்சிகைகளை கொடுத்து பார்க்கும் படி ஆரிபீன் தூண்டியதை எந்தக் காவாலித் தனத்தில் சேர்ப்பது? அனைவருக்கம் பொதுவான பாடசாலைக்குள் தவறான இயக்கச் சிந்தனைகளை வளர்க்க முனைந்ததால் தான் தற்போது எமது பாடசாலை காவாலி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அங்கு இரண்டு வழிகெட்ட ஜமாஅத்தின் வக்கிரம்தான் தாண்டவமாடுகிறது.
தல்கஸ்பிடியில் எத்தனையோ தியாகங்களை மேற்கொண்டு எமது முன்னோர்கள் தொடக்கம்; இன்று வரை பலர் பல தியாகங்களைச் செய்து பித்அத்தான பல காரியங்களை ஒழித்துள்ளனர்.தூய சத்திய இஸ்லாத்திற்கும் அசத்தியத்திற்குமிடையில் தெளிவான பிரிகோட்டைப் பலமாகப் போட்டு வைத்துள்ளனர். எனினும் ஆச. ஆரிபீன் தவ்ஹீத் கொள்கை மாணவர்களையும் பித்அத்தான கூட்டு துஆவுக்கு ஆமீன் சொல்லும்படி வற்புறுத்தி, அடிப்பதற்காக கம்பெடுத்ததை எந்த தவ்ஹீத் வாதியும் பொறுக்கமாட்டான். தவ்ஹீத் கொள்கை சார்ந் மாணவர்களுக்கு அடிக்க பித்அத், வழிகேட்டிலுள்ள 3சன pயசவலக்கு எந்த அருகதையும் உரிமையும் கிடையவே கிடையாது.

ஊர் மக்களே! எமது ஒரு கண்ணை – பாடசாலையை மூன்றாம் ஜமாஅத் இயக்க வெறியர்களிடமிருந்து பாது காப்போம். பொதுச் சொத்து மூன்றாம் ஜமாஅத்தின் சொத்தாக்கப் படுவதைவிட்டும் அது பித்அத் தளமாக்கப்படுவதை விட்டும் தடுப்போம். இதற்காக அனைவரும் அணி திரண்டு வாருங்கள்.
சென்ற ரமளானில் நடந்த சம்பவங்களையும் கொஞ்சம் மீட்டிப் பாருங்கள். இரண்டு ஜமாஅத்தையும் இணைக்க வந்தோம் என்றவர்கள் சம்பந்தம் இல்லாதவர்களை எல்லாம் சிறையில் அடைக்க எத்தனை பொய் வழக்குகள், பொய் சாட்சிகள், இவர்கள் பாடசாலையிலும் மார்க்கம் என்ற பெயரால் அதிகமாக பொய் சொல்வதால் பொலிஸ் நிலையத்திலும் பொய்யையே சொல்லி இருக்கிறார்கள்.

தவ்ஹீது வாதிகள் ஈமானிய ரோசம் உள்ளவர்கள். தங்கள் உயிரை விட மேலான இந்த மார்க்கத்தைக் காக்க களத்துக்கு வந்துவிட்டார்கள். முன் வைத்த காலை இனி பின் வைக்க மாட்டார்கள் என்பது இப்போது அசத்தியக் கும்பலுக்குத் தெளிவாகப் புரிந்து இருக்கும். ஒழித்து ஒழித்து தஃவா செய்வதும், பொய்களை எழுதி,திருட்டு நோட்டிஸ் வெளியிட்டு வீட்டுக்குப் பின் வாசலுக்கு கீழ் – கொல்லைப் புறமாகப் – போட்டுச் செல்வதும் தவ்ஹீத் வாதிகளின் வழியல்ல.அது அசத்தியவாதிகளான 3சன pயசவலய யின் வழிமுறை. நாம் சொல்வதை, தெளிவாக எல்லோருக்கும் முன் பகிரங்கமாக, பயமின்றி சொல்லுவோம்.அது ஒன்றே நாங்கள் சொல்வது சத்தியம் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்.
26.11.2007 அன்று எமது பாடசாலையில் நடந்த மிக மோசமான நடவடிக்கைகளை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். வெளியூரிலிருந்து வந்து எங்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியை நிர்வாணமாக வரைந்திருக்கின்றார்கள். இவ்வாறு வரைந்தது தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த 10ம் 11ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் தான் என்று அவர்கள் எந்த வித ஆதாரமும் இல்லாமல் கூறியது மட்டுமல்லாமல், அந்த மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து, விசாரித்தது மட்டுமல்லாமல், பொலிஸ் நிலையத்திலும் இவர்கள் ‘என்ட்றி’ ஒன்றை போட்டிருக்கின்றார்கள். அதனால்,பொலிஸ் அதிகாரிகள் வந்து,எந்த வித ஆதாரமும் இல்லாமல் அந்த அப்பாவி மாணவர்களை விசாரித்து, எச்சரிக்கை செய்து விட்டு சென்றிருக்கின்றார்கள். ஆனால், இந்த மாணவர்கள் தான் செய்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இந்தப் பொய்யர்களிடம் இல்லை. இதை விட வேடிக்கை என்னவென்றால். சனிக்கிழமை அரைவாசி வரையப்பட்டிருந்த அந்த சித்திரத்தை, தப்லீக் ஜமாஅத் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவன் கண்டு, அதை ஓர் ஆசிரியரிடம் காண்பித்தான்;. இதைக் கண்டும் காணாதது போல் அந்த பொறுப்புள்ள (?) ஆசிரியர் இருந்துவிட்டார். ஞாயிற்றுக் கிழமை அந்த சித்திரம் சிலரால் பூரணமாக்கப்பட்ட பின்னர், எப்போதும் ஒரு தலைப்பட்சமாக நடக்கும் பாடசாலை நிர்வாகம், தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த அப்பாவி மாணவர்களை அழைத்து விசாரித்திருக்கின்றார்கள். இது தவ்ஹீத் ஜமாஅத்தைப் பழிவாங்கும் வெறித்தனம்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த அப்பாவி மாணவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தடனும் அதன் தஃவா நடவடிக்கைகளுடனும் ஈடுபாடு உள்ளவர்கள். இந்த கோபத்தில் தான் சில குறிப்பட்ட வக்கிரபுத்யுள்ள ஆசிரியர்கள் சேர்ந்து இப்படியான ஒரு சித்திரத்தை வரைந்து, வேண்டுமென்றே இந்த மாணவர்கள் மேல் பழி சுமத்தியிருக்கின்றார்கள். நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்விடம் இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஊர் மக்களே! கிலாபத் கோஷமிடும் சந்தர்ப்பவாதிகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள். அடுத்த பள்ளிக்கு சென்று நடிப்பது போன்று எமது பள்ளிக்குள்ளும் நடிக்கப் பார்க்கிறார்கள். தவ்ஹீத் வாதிகளுக்கு எதிராக மொட்டைக் கடிதமும், மொட்டை நோட்டீசும் அனுப்புவது தான் இவர்களின் பிரதான தொழில். அதே போல் ஒன்றிரண்டு சாதாரண சுன்னத்துகளை மட்டும் செய்து கொண்டு அதை பெர அடித்துக் கொண்டு, நபியவர்களின் பல நூறு சுன்னத்துகளை காலில் போட்டு மிதித்து பித்அத்களை உயிர்ப்பிப்பது தான் இந்த சந்தர்ப்பவாதிகளின் செயற்பாடாகும். தவ்ஹீத்வாதிகளுக்கு ஷிர்க்கிற்கும் – ஏகத்துவத்திற்கும், பிஅத்திற்கும – சுன்னாவிற்கும் நன்கு வித்தியாசம் தெரியும். ஆனால் மூன்றாவது ஜமாஅத்வாதிகளுக்கு எந்த வேறுபாடும் தெரியாது. எல்லாம் ஒன்று என்று தான் அவர்கள் இங்கும் அங்குமாய் அலைகின்றார்கள். உண்மையான கொள்கைவாதி தவ்ஹீதில் மாத்திரமே நிலைத்திருப்பான். எல்லாம் சரி என்பவன் கொள்கையற்ற கோமாளியாவான்.
தவ்ஹீத் வாதிகள் இஸ்லாமிய கிலாபத்திற்கு எதிரானவர்கள் அல்லர். ஜிஹாத் நூற்றுக்கு ஐம்பது வீதம் இருக்கும் போது தான் கடமையாகும். இந்த சட்டம் எல்லாம் இந்த மூன்றாவது ஜமாஅத் மத்ஹபுவாதிகளுக்கும், ஷியா ஆதரவாளர்களுக்கும், தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இலங்கையில் நாம் எட்டு விகிதம் மாத்திரமே இருப்பதால் எமக்கு ஜிஹாத் கடமை இல்லை. இஸ்லாத்தை மாற்றாருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். எமது பிரசாரத்தால் நமது எண்ணிக்கை அதிகரித்தால் நாம் எதையும் செய்யலாம். இப்போது இவர்கள் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு கோஷமிடுவது போன்று ஜிஹாதை ஆரம்பித்தால் டுவுவுநு யின் நடவடிக்கையால் தமிழ் மக்கள் அழிக்கப்படுவது போன்று, எமது தாய்மார்களும் சகோதரிகளும் வெளியில் செல்ல முடியாது. சோதனைச் சாவடிகளில் எமது தாய்மார்களின் ஃபர்தாக்கள் களையப்படும் நிலை வரும். எம்மை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்து விடுவார்கள். இந்த இழிநிலையை தோற்றுவிக்க நீங்கள் அனுமதிக்கலாமா?
இந்த மூன்றாம் ஜமாஅத் வைக்கும் இதே கோசத்தைத்தான் ஜமாஅத்தே இஸ்லாமியும் வைக்கிறது. எனினும்,இவர்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லை.பல கூறாகப் பிரிந்து இயக்க வியாபாரம் செய்கிறார்கள். பாக்கிஸ்தானிலும் எகிப்திலும் இவர்கள் எதையும் சாதிக்கவில்லை. அவை, முஸ்லிம் நாடுகள். அங்கே கூட இவர்களின் பருப்பு வேகவில்லை. இலங்கையில் என்னதான் செய்யப்போகிறார்களோ?

சில வருடங்களுக்கு முன்னர் பெரும்பான்மை இனத்திலிருந்து மக்கள் விடுதலை முன்னணி (துஏP) என்ற அமைப்பு உருவாகி ரஷ்யா, சீனா போன்ற பெரும் வல்லரசுகளின் பலத்துடனும் இலங்கை நாட்டின் பெரும் பதவி வகித்தவர்களின் உதவியுடனும் இவர்கள் போன்று ‘மெத்தப் படித்தவர்களை’ வைத்து, திட்டம் தீட்டி கொள்ளை அடித்து, கொலை செய்து ஆயுத வன்முறையிலிலும் அரச விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. அவர்களை அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு அடக்கி அழித்தது. சிங்கள மொழியை பேசிய பௌத்த இளைஞர்களுக்கே இந்த நிலை என்றால் சிறுபான்மை முஸ்லிம்களை சும்மா விடுவார்களா?நிதானமாக சிந்தியுங்கள்!
நடு நிலை தவறாத மக்களே! எமது ஊரை மேலும் பல கூறாகப் பிரித்து, பாடசாலையை நாசப்படுத்தி அதை 3சன pயசவல இயக்கத்தின் களமாக மாற்றுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. இதுவரை காலமும் அமைதியாக இருந்த இரண்டு ஜமாஅத்தினரையும் சண்டை மூட்டி விட்டு, அதில் குளிர் காய முனையும் சந்தர்ப்பவாதிகளையும் சுய நல வாதிகளையும் இனியும் வளர விடக் கூடாது. எமது கொள்கையையும் பாடசாலையையும் பாதுகாப்போம் மூன்றாம் ஜமாஅத்தை ஊரை விட்டும் நாட்டை விட்டும் விரட்டுவோம் அதற்கு அணிதிரண்டு வாருங்கள்! ஆதரவு தாருங்கள்!!
வஸ்ஸலாம்.

வெளியீடு :
தல்ஸ்பிட்டிய தவ்ஹீத் சகோதரர்கள்

Read more...

முஸ்லிம் பெண்கள் சினிமாவில் நடிக்கலாம்!



யூசுஃப் அல் கர்ளாவியை ஓர் மார்க்க அறிஞராக காண்பிக்க, மார்க்கத்தின் அடிப்படைகள் தெரியாத சில கனவுலக இயக்கங்கள் முயற்சிக்கின்றன. யூசுஃப் அல் கர்ளாவிக்கு எப்படி இஸ்லாத்தின் அடிப்படைகளும் ஒழுக்கப்பண்பாடுகளும் தெரியவில்லையோ அதேபோல அவரது விசிறிகளுக்கும் தெரியவில்லை. இவர் எழுதிய பல நூல்களில், கட்டுரைகளில் யூத, கிறஸ்தவர்களுக்கு கூஜா தூக்கும் நிலை தாராளமாக காணக்கூடியதாக உள்ளது. உலகத்தில் ஒழுக்கக்கேட்டையும் பண்பாட்டு சீரழிவையும் பரப்புபவர்களில் யூத, கிறிஸ்தவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இவர்களுடைய பிரதான தொழிலான இசையும் சினிமாவும் யூசுஃப் அல் கர்ளாவிக்கு ஹலாலாக தெரிகிறது.


இசையும் சினிமாவும் ஹலால் என்று தனது ஃபத்வா முஆஸிராவில் குறிப்பிடுகின்றார் இவர்.


இசை ஹலால் என்று அல் ஹலால் வல் ஹராம்‘ என்ற புத்தகத்தில் பக்கம் 391-ல் குறிப்பிடுகின்றார்.
முஸ்லிம் பெண்கள் நாடகங்கள் மற்றும் சினிமாவில் பங்கேற்பது தடையில்லை என்று குறிப்பிடுகிறார். (ஜரீததுல் அக்பார் எண் 401)

ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் குழிதோண்டி புதைக்கும் வெறித்தனமான ஆடலுடன் கூடிய பாடல் காட்சிகளுடன் வெளிவரும் இன்றைய சினிமாவின் நிலையை கொஞ்சம் மனக்கண்முன் நிறுத்தி பாருங்கள்.
தொப்புளில் ஆம்லெட் போடுவதும், பம்பரம் விடுவதும், டூ பீஸ் நீச்சல் உடையுடன் பெண்களை அலையவிட்டு காமவெறியாட்டம் புரிவதும் படுக்கை அறை காட்சிகளை அப்பட்டமாக காண்பிக்கும் சினிமா, இவருக்கு ஹலாலாம். பணத்திற்காக முக்கால் நிர்வாணமாக நடிக்கும் இந்த சினிமாவில் முஸ்லிம் பெண்களும் பங்குபெறலாமாம். கிழவனைக்கூட பாலியல் துஷ்பிரயோகம் செய்யத்தூண்டும் இசையையும் சினிமாவையும் ஹலால் என்பவன் உண்மையில் இஸ்லாத்தை நேசிப்பவனாக இருக்கவே முடியாது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து எனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி தாருங்கள்என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் அவரை அழைத்து, ‘உன்னுடைய தாயுடனோ அல்லது சகோதரியுடனோ யாரும் விபச்சாரம் செய்வதை நீர் விரும்புவீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘நான் விரும்பமாட்டேன்‘ என்று கூறினார்.அப்போது நபியவர்கள் நீர் யாருடன் விபச்சாரம் செய்ய விரும்புவீரோ,அவளுடைய சகோதரனும் உறவினரும் இதை விரும்பமாட்டார்கள்‘ என்று கூறினார்கள்.

சினிமாவையும் பாடலையும் ஹலால் என்று கூறும் யூசுஃப் அல் கர்ளாவி, தனது மகளை, மனைவியை சினிமாவில் நடிக்க அனுமதிப்பாரா? தினம் ஒரு அந்நியனோடு படுக்கையறை காட்சிகளில் முக்கால் நிர்வாணமாய் நடிக்க சம்மதிப்பாரா? அல்லது இவரை பின்பற்றும் நவீன கிலாஃபத் கோஷதாரிகளே! இஸ்லாமிய ஆட்சியை உலகம் முழுவதும் கொண்டுவர துடிக்கும் இரகசிய காவலர்களே! உங்கள் குடும்பத்தினரை இதுபோல் சினமாவில் நடிக்க அனுமதிப்பீர்களா?
அவர்கள் உமக்குப் பதிலளிக்கா விட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையேபின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்தநேர் வழியின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழி கெட்டவன் யார்அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்ட மாட்டான்.
(திருக்குர்ஆன் 28:50)

Read more...

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  © SLTJ Head Office Web site

Site Designed and Developed by
MSM SAFWAN 2009

Back to TOP