ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இலங்கை அழைத்துவரப்பட்ட தென்னிந்திய அறிஞர் அல்தாஃபி அவர்கள் இலங்கையில் ஆற்றிய உரைகளின் CD மற்றும் DVDக்களை பெற்றுக்கொள்ள 0771-299562 என்ற தொலை பேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

ஜனவரி 27 பாபர் மஸ்ஜித் வழக்கின் அநியாயத்தீர்ப்பை கண்டித்து நடைபெற்ற போராட்டப் புகைப்படங்கள்

Monday, January 31, 2011


ஸ்தம்பித்து போன சென்னை- அழைகடலென திரண்ட மக்கள் கூட்டம்! அல்ஹ்ம்துலில்லாஹ்!
thanks to: www.tntj.net

Read more...

கொள்கையில் தடம்புரண்ட இலங்கை ஏகத்துவ வாதிகள் -௦௨

Sunday, January 30, 2011


சப்வான்  தவ்ஹீதி

அன்பின் இஸ்லாமிய நேயர்களே, சென்ற தொடரில் இலங்கையில் ஏகத்துவம் பேசியவர்கள் எப்படி தடம்புரண்டார்கள் என்பதை சுருக்கமாகப் பார்த்தோம். இந்த தொடரில் அந்த தௌஹீத் போர்வை போர்த்திய தௌஹீத் அல்லாதவர்களில் சிலர் விவாதத்தில் பின்தங்கி ஓடிய ஓடியோ ரெக்கோர்ட் ஐ இணைக்கவுள்ளோம்.

குர்ஆனும் ஆதபூர்வமான  ஹதீஸும் மட்டும் தான் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் என்ற கொள்கையில் தமிழ் நாடு தௌஹீத்  ஜமாஅத்தும் உலகளாவிய ரீதியில் இருக்கும் அதன் கிளைகளும் உறுதியாக உள்ளனர். ஆனால் கொள்கையில் பேரம் பேசும் போலி   தௌஹீத் வாதிகளோ பல சந்தர்பங்களில் இதில் மாறுபட்டு நிற்கின்றனர். குர்'ஆனும் ஹதீஸும் தான் இஸ்லாத்தின் மூலாதாரம் என்பார்கள் தேவை படும் போது சஹாபாக்களின் சொந்தக் கருத்துகளும் மார்க்கம் தான் என்பார்கள். குர்'ஆனும் ஹதீஸும் தான் இஸ்லாத்தின் மூலாதாரம் என்பார்கள், தம் வாதங்களை நிரூபிக்க சலபுகளின் கருத்துக்களையும் எடுத்துக் கொள்வார்கள். இவற்றுக்கெல்லாம் நிறைய ஆதாரங்களை இன்ஷா'அல்லாஹ் அடுத்த தொடர்களில் எடுத்துக் காட்டவுள்ளோம்.
      ஆரம்ப காலங்களில் இலங்கயில் ஏகத்துவத்துக்கு முரணாக செயல்பட்டவர்களை எல்லாம் பகிரங்க மேடை பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் விவாத அழைப்புகளை தொடுத்தவர்கள் இப்போது தங்களையே முஷ்ரிக் என்று திட்டவட்டமாக சுட்டிக் காட்டியும் விவாதம் என்ற பேச்சுக்கே இடம் வைக்காமல் பின்தங்குவது தான் நம்மை அதிர்ச்சியில்லூட்டும் காரியமாகும். அசத்தியத்தின்  தூனாக நிற்பவர்களே இன்றைக்கு விவாதம் தான் கொள்கையை நிரூபிக்க சிறந்த களம் என்று துணிச்சலாக முன்வரும் இக்கால கட்டத்தில் ஏன் தானோ! இந்த மாமேதைகளுக்கு(?) விவாதம் என்றாலே அலர்ஜியாக உள்ளது. எதாவது பொருந்தாத ஒரு காரணத்தை சொல்லி நழுவுகிறார்கள். எது எப்படி இருந்தாலும் இவர்கள் விவாதற்கு பிந்தங்குவதன்  மூலம் இவர்களின் கருத்துக்களை நிரூபிக்க இவர்கள் தயாரில்லை என்பதையும்  தாம் கொண்ட கொள்கையில் தாமே உறுதியில்லை என்பதையும் மக்களுக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
       நமது ஜமா'அத் TNTJ இலங்கை கிளை என்ற பெயரில் செயல்படும் போது ஜமா'அத்

சார்பாக இலங்கையை சேர்ந்த மாற்றுக் கருத்துடைய நம் நாட்டில் பிரபல்யமான சில ஆலிம்(?)களுக்கு நேரடியாகவும் கடிதம் மூலமும்  தொலைபேசியிலும்  நம்மோடு முரண்பட்டுள்ள கருத்துக்களில் விவாதித்து அல்லது கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவோம் என்று விவாத அழைப்புகளை கொடுத்தோம். இது வரைக்கும் எவருமே விவாதத்துக்கு முன்வரவில்லை.
 து பற்றிய மேலதிக தகவல்களுக்கும் விவாதத்தில் பின்தங்கியவர்களின் நேரடி வார்த்தைகளை கேற்கவும் இங்கே கிளிக் பண்ணவும்.
இஸ்லாத்தை  தெளிவாக அறிந்து அதனை சரியாக பின்பற்றி, பிரச்சாரம் செய்து மறுமையில் வெற்றி பெற முயற்சிப்போமாக.

Read more...

கொள்கையில் தடம்புரண்ட இலங்கை ஏகத்துவ வாதிகள் -01


சப்வான் தவ்ஹீதி 

அன்பின் .இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, கிட்டத்தட்ட 50  ஆண்டுகளுக்கு முன்னாள் இலங்கையில் ஏகத்துவப் பிரச்சாரம் ஆரம்பிக்கப் பட்டது. அன்றைய காலகட்டங்களில் நம் கொள்கை வாதிகள் கொள்கை உறுதியிலும் வீரியமாகவும் பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்தவர்களாக பிரச்சாரத்தை தொடர்ந்தனர். இலங்கையின் பல பிரதேசங்களிலும் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பிரச்சம் மேற்கொள்ளபட்டு அல்லாஹ்வின் அருளால் அதில் பாரிய வெற்றியும் கிடைத்தது.

இப்படியே பிரச்சாரம் தொடர அல்லாஹ்வுக்காக மார்க்கத்தை பிரச்சாரம் செய்த நம் ஆலிம்கள் தம் சொந்த வாழ்க்கை குறித்து சிந்திக்கலானார்கள். கொள்கையை பிரச்சாரமும் செய்ய வேண்டும், சொந்த வாழ்க்கையையும் பார்க்க வேண்டும் என்று சிந்தித்தார்கள். பிறகு சிலரின் ஆலோசனைகளின் படி அல்லது வேண்டுகோளின் படி வெளிநாடுகளின் உதவியை நாடினார்கள்.கொள்கைக்காக என்ன உதவியை வேண்டுமானாலும் செய்வோம் என்ற அரபியர்களின் பணத்தை தஹ்வாவிற்கு பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதனாலே பிரச்சாரகர்களின் சம்பளங்களையும் எடுத்துக் கொண்டார்கள்.
சுருக்கமாக சொல்லப்போனால் வெளிநாட்டுப் பணத்துக்கு அடிமையகிவிட்டர்கள்.

 ஆரம்பத்தில் கொள்கையில் இருந்த உறுதியும் பிரச்சாரத்தில் காட்டிய வீரியமும் குபடிப்படியாக குறையத் தொடங்கியது. கொள்கையை அரேபியர் பணத்தில் அடகு வைத்தர்கர்கள். குர்'ஆனும் சஹீஹான ஹதீஸும் தான் இஸ்லாத்தின் மூலாதாரம் என்ற நிலைப் பாட்டை மாற்றி மூன்றாவது ஒரு நிலைப்பாடாக சலபு (சஹாபாக்கள்,தாபியீன்கள்,தப'உத் தாபிஈன்களை பின்பற்றுதல்) என்பதையும் பெரும்பான்மையான ஆலிம்கள் எடுத்துக் கொண்டு அதற்கு வேறுவிதமான வியாக்கியானங்களும் சொல்லத் தொடங்கி விட்டனர்.

இலங்கையில் தற்போதைக்குள்ள தௌஹீத் பேசும் இயக்கங்களில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் உட்பட ஓரிரு அமைப்புகள் தான் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் குர்'ஆனும் ஹதீஸும் மட்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டவர்களாக உள்ளனர்.
எப்படி இவர்கள் தடம்புரண்டு போனார்கள் என்பதற்கான அடுக்கடுக்கான தகவல்களையும் இத்தோடு இணைக்கவுள்ளோம்.


ஏன் இவர்களின் தகவல்களை மக்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்ற ஒரு கேள்வி நம் கொள்கை வாதிகள் மத்தியிலே எழுந்துள்ளது. ஆனால் இவர்கள் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்பாக செய்யும் மோசமொசடிகளையும் கொள்கையில் இவர்களின் இரட்டை வேசத்தையும் தெரிந்தவர்கள் அது தப்பு என்று ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சிலர் அவர்களின் பிழையான போக்குகளுக்கு பின்னாலும் அவர்களையே தங்கள் இமாம்களாக கொண்டுள்ளார்கள். சிலர் இதுபற்றி இன்னும் அறியாமலேயே இதுபோன்றவர்களை நம்பி தங்கள் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பலவேசமுடையோரை மக்களுக்கு அறிமுகப் படுத்தி உண்மையான ஏகத்துவதிகள் யார் என்பதை காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம். இறைவன் தன் திரு மரையிலே சொல்கிறான் "சத்தியம் வந்து விட்டது. அசத்தியம் அழிந்து விட்டது. திண்ணமாக அசத்தியம் அழிந்தே தீரும்." (அல் குர்ஆன் 17 :81 )
சத்தியம் பலவளியாக இருக்காது. இரண்டில் ஒன்று சத்தியம் என்றால் மற்றது அசாத்தியமே. இதை பிரித்துக் காட்டுவது கொள்கையின் தனித்துவத்தை பாதுகாக்கும் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

சூனியம் என்ற மூடநம்பிக்கையை உண்மைப் படுத்த முயலும் ஏகத்துவா (ஷிர்க்) வாதிகளின் வாதத்திற்கான பதில் 

சகோதரர் பீஜேயின் கட்டுரையை படிக்க இங்கே கிளிக் பண்ணவும்.
இது இஸ்மாயில் சலபியின் ஆய்வு?க்கான மறுப்பு என்றாலும் இலங்கையில் சூனியம் பற்றிய இஸ்லாத்தின்       
நிலை பாட்டை தப்பாகப் புரிந்து பிரச்சாரம் செய்யும் எல்லா முஷ்ரிக் களுக்கும் பொருத்தமானதாகும்.
தாங்கள் கொண்டுள்ள கொள்கை தவறு என்பதை நிரூபிக்கத் தயார்  என்று பகிரங்க விவாத அழைப்புகள் கொடுக்கப்பட்ட போது பின்தங்கி ஓடியவர்கள்.

இலங்கையில் தௌஹீத் பேசும் ஏராளமான சகோதரர்கள் கதீஸ் கலையில் போதிய ஆய்வற்றவர்களாகவும் இஸ்லாத்தில் மூன்றாம் நிலைப்பாடாக சஹாபாக்களையும் எடுத்தவர்களாக உள்ளனர். ஆனால் இவர்களில் யாருமே தாம் கொண்ட கொள்கையை நிரூபிக்கக் கூட தகுதியற்றவர்களாகத தான் இருக்கிறார்கள்.
இவர்த்களை பல சந்தர்பங்களில் இவர்களுக்கு விவாத அழைப்புகள் கொடுக்கப் பட்டும் பலவிதமான சாட்டுப் போக்குகள் கூறி சந்தர்ப்பங்களை தட்டிக் களித்தனர்.
இன்ஷா அல்லாஹ் ஓட்டம் பிடித்தவர்களின் ஆடியோ ரெக்கோட் ஐ மிக விரைவில் இக்கட்டுரையில் இணைக்கவுள்ளோம்.
அத்தோடு அரபியர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் போலி தௌஹீத் வாதிகளின் நிதி மோசடிகளைப் பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.

ஆய்வு என்ற பெயரில் அரபியர்களை மிஞ்சாமலும் மக்களின் மனம் நோகமலும் சொன்ன கருத்தை மாற்றக் கூடாது என்ற நிலையில் ஏகத்துவத்தை பிரச்சாரம் செய்யும் தௌஹீத்(?) பெயர் தாங்கிகளே!
ஒருகணம் இஸ்லாத்தை சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்குத் தான் ஹதீஸ் களை தெரியும் என்று மார்தட்டிக் கொள்ளாமல் குர்'ஆன் மற்றும் சஹீஹான ஹதீசுக்குக் கீழால் நின்று உங்கள் மறு ஆய்வை ஆரம்பியுங்கள்.

Read more...

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  © SLTJ Head Office Web site

Site Designed and Developed by
MSM SAFWAN 2009

Back to TOP